“தோனி தேசத்துரோகியா?” – சமூக வலைதளங்களில் பரவும் விவாதம்: பின்னணி என்ன?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பகமான கேப்டனாக தொடர்ந்து இருப்பவர் எம். எஸ். தோனி. இந்திய கிரிக்கெட்டில் தனது முக்கிய பங்கு மற்றும் பெரும் சாதனைகளால் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் “Same on deshdrohi Dhoni” எனும் ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது, இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தின் தொடக்கமாக, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ஹர்பஜன் சிங் கூறிய கருத்துகள் காரணமாகும். ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர்,
“தோனிக்கு உண்மையான ரசிகர்கள் உள்ளனர். மற்ற சில வீரர்கள் சமூக வலைதளங்களில் மட்டும் பிரபலங்கள். சிலர் ரசிகர்களிடம் காசு கொடுத்து தங்களை பிரபலமாக்கிக்கொள்கிறார்கள்.”
என்றார்.
இந்த கருத்துகள் நேரடியாக கூறப்படாத போதும், இந்தியா அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை குறிவைத்ததாக கோலி ரசிகர்கள் கண்டுள்ளனர். இதனால் விராட் கோலி ஆதரவாளர்கள் சோர்வடையும் முறையில் தோனிக்கு எதிராக “தோனி தேசத்துரோகி” எனும் குற்றச்சாட்டுக்களுடன் ஹேஷ்டேக் பதிவுகளை பரப்பத் தொடங்கினர்.
இதை எதிர்கொண்டு தோனி ரசிகர்கள் “#NationalsameKohli” எனும் ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகிறார்கள். இது ஒரு மாறுபட்ட சமூக வலைதளப் போராக உருவெடுத்து வருகிறது.
தோனியின் எதிர்ப்பாளர்கள் கூறும் முக்கியமான குற்றச்சாட்டுகள்:
- பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற “ஆப்பரேஷன் சித்தூர்” குறித்து தோனிக்கு தெரியாததென்று கூறப்படுகிறது.
- தோனி வெற்றிக்குக் காரணமாக முன்னிறுத்தப்படுகிறார், ஆனால் தோல்விக்கு முழு அணி குற்றவாளியாக சித்தரிக்கப்படுவது தவறு என சிலர் வாதிடுகின்றனர்.
இதையும் படிங்க :ஆர்சிபி கோப்பையை வெல்வது நிச்சயம்.. முகமது கைஃப் அடிச்சு சொல்றார்!
இந்த ஹேஷ்டேக் “sameondeshadrohidhoni” விவகாரம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரிய இரு பிளவுகளை உருவாக்கி, சமூக வலைதளங்களில் வன்மையான விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. இது வெறும் கிரிக்கெட் தாண்டி, உணர்வுப் போர்களாக மாறிவரும் சூழ்நிலையை காட்டுகிறது.
One thought on ““தோனி தேசத்துரோகியா?” – சமூக வலைதளங்களில் பரவும் விவாதம்: பின்னணி என்ன?”