இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் சுப்மன் கில் ஆக வேண்டும் – ரவி சாஸ்த்ரி விருப்பம் தெரிவிப்பு
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு முன்னதாக, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றதையடுத்து கேப்டனாக யார் என்பதில் கேள்விகள் எழுந்துள்ளன. பும்ரா மீது நம்பிக்கை இருந்தாலும், அவரின் காயம் மீண்டும் வந்திருப்பதால் சாஸ்த்ரி எச்சரிக்கை விடுத்துள்ளார். சுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரில் ஒருவரே எதிர்கால தலைவர்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக பயணம் செய்யவிருக்கிறது. இந்த தொடருக்கு முன்னதாக, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்ட் ஃபார்மாட்டில் ஓய்வெடுத்துவிட்டனர். இதனால் அனுபவம் குறைந்த நிலையில், அடுத்த கேப்டனாக யார் பொறுப்பேற்கப்போகிறார்கள் என்பது பற்றி பலருக்கும் கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த சூழலில், முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி, சுப்மன் கில் தலைவராக மிகச்சிறப்பாக இருக்க முடியும் எனக் கூறியுள்ளார்.
“சுப்மான் IPL-ல் நான்கு ஓவர் கிரிக்கெட்டில் விளையாடியிருக்கிறார். இப்போது 10-15 ஓவர்களுக்கு பந்து வீச வேண்டிய டெஸ்ட் கட்டத்தில் இருக்கிறார். அதிலும் கேப்டனாகவும் பதவி ஏற்பதால் மன அழுத்தம் கூடக்கூடாது,” என்று சாஸ்த்ரி ICC Review நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
“நீங்கள் ஒருவரை தயார் செய்ய வேண்டும். சுப்மான் நல்லா விளையாடறாரு. அவருக்கு வாய்ப்பு கொடுக்கணும். வயசு 25-26 தான். அவருக்கு இன்னும் நேரம் கொடுங்கள்,” எனவும் அவர் கூறினார்.
மேலும், சாஸ்த்ரி கூறியதாவது:
“ரிஷப் பண்ட் உள்ளார். இந்த இருவரும் (கில் மற்றும் பண்ட் ) எனக்கு மிகவும் பொருத்தமான தேர்வுகள் போல தெரிகிறார்கள். இவர்கள் இருவருக்கும் இன்னும் 10 ஆண்டுகள் இருக்கிறது. அவர்கள் கற்றுக்கொள்ளட்டும். IPL-ல் இருவரும் தங்கள் அணிகளை நன்றாக நடத்துகிறார்கள். அது முக்கியமான அனுபவமாகும். சுப்மன் அமைதியாகவும், தன்னம்பிக்கையுடனும் இருக்கிறார் – அவர் ஒரு சிறந்த தலைவர் ஆவார்.”
இதையும் படிங்க :அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியாவின் டெஸ்ட் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா இருக்கலாம் – ஆர். அஷ்வின் கருத்து
ஜஸ்பிரித் பும்ரா பற்றி சாஸ்த்ரி மேலும் கூறியதாவது:

“ஆஸ்திரேலியாவில் அவர் கேப்டனாக இருந்ததைக் கொண்டு பார்த்தால், பும்ரா தெளிவான தேர்வாக இருந்திருப்பார். ஆனால் அவருடைய உடல் நலத்தை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு போட்டியையும் தனித்தனியாக பார்த்து முன்னேற வேண்டும். அவரை கேப்டனாக நியமித்து, பிறகு ஒரு சிறந்த பவுலரை இழக்க வேண்டாம். அவர் தற்போது ஒரு பெரிய காயத்திலிருந்து திரும்பி வருகிறார்.”
One thought on “இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் சுப்மன் கில் ஆக வேண்டும் – ரவி சாஸ்த்ரி விருப்பம் தெரிவிப்பு”